Monday, October 23, 2006

இ.பி.சி பிரிவு 377 - ஒரு அறிமுகம்


இபிசி பிரிவு 377 என்றால் என்ன? ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற ஒரு ஏட்டுச்சுரைக்காயா? அல்லது அப்பாவி இளைஞர்களிடம் அராஜகம் செய்து வசூல் செய்ய போலீசுக்கு ஒரு வழியா? எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் பல்லாயிரம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இது ஒரு நிஜம் - நீக்கப்படவேண்டிய நிஜம். அப்படி என்ன தான் சொல்கிறது இந்தப்பிரிவு???

377. Unnatural offences
Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with 152[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
Explanation- Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section.


அதாவது யாராவது தன்னிச்சையாக, எந்தவொரு ஆண், பெண் அல்லது மிருகத்துடன் இயற்கையை மீறிய பாலுறவு.. வைத்துக்கொண்டால் ஆயுள்கால சிறை தண்டனையோ (அல்லது அந்த காலகட்டம் 10 வருடங்கள்) மற்றும் கண்டனத்தொகை விதிக்கப்படுவார்கள். இதற்கு உட்செலுத்துதல் சாட்சியாக ஏற்கப்படுகிறது..

பிரிவு 377 மாறுபட்ட பாலீர்ப்பாளர்களின் அடிப்படை உரிமையை குற்றமாகக் காட்டுகிறது.வரலாற்று ரீதியாக இதைப் பார்த்தோமானால் 1837-ல ஆன்கிலேயர்கள் ஆட்சியில் லார்டு. மகாலேயால் போடப்பட்டது. இன்கிலாந்தில் 1967-ல இந்த சட்டம் நீக்கப்பட்டது.ஆனால் இந்தியாவில் இன்னும் இந்தச்சட்டம் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது.

திசம்பர் 2001-இல் HIV AIDS தொடர்பான சமூகப்பணி மேற்கோன்டு வரும் நாஜ் பவுண்டேசன் தில்லி ஐ கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தது.வயது வந்தவர்கள் சம்மதத்துடன் ஈடுபடும்செய்கைகளை குற்றப்படுத்த வேண்டாம் என்பதே அந்த கோரிக்கை.இந்திய சட்டக்க்குழு தனது 172வது ரிப்போர்ட்டில் இந்தப்பிரிவை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

No comments: